jeudi 13 février 2014
காதலர் தின இனிய நல் வாழ்த்துகள்..
காதல்., காதல்.,
காதலென்றே காணும் இன்பம் கோடி.!
இதை வாழ்வில் ஓர் நாள் இணைந்தே.. சுரம் மீட்டி.!
திளைப்போம் கூடி..!
முற்றுப் புள்ளி
இல்லாதது.. காதல்!முடிவுரை தொடாதது.. காதல்!
ஒரு விழி அழும் போதில்
மறு விழி சிரிப்பதல்ல.. காதல்!
உடல் பசி சுவை கொள்ளும்
பஞ்சாமிர்தமும் அல்ல.. காதல்!
நெஞ்சறை தனில் - வெண்
சாமரைத் தென்றல்கொள்வதே.. காதல்!
பயணங்கள் முடியும்
பாதைகள் தொடரும்
பாரினில் புது
பூக்கள் மலரந்து வரும்நீ இன்றி போனால் என்ன.?
எண்ணற்ற காதலர்கள்
உன் பெயர் சொல்லி மகிழும்
இதுவே.. உன்னதக் காதல்..!
mardi 11 février 2014
dimanche 9 février 2014
விடியலை தொடவேண்டும் விழியே...
கைவளையும் காகிதப்
பூவும் தானே
எம் சிறை
இருப்புக்கான சீர்கள் ..!கனாக் காண்பதற்காகவா..?
இருளோடு உறவாடும் உன்னை
சினேகம் கொண்டேன்..!
மஞ்சள் குளித்து மௌனம் காத்து
மரணித்துக் கிடக்கிறோம் இன்னும்..!
பெத்துப் போட ஒரு இயந்திரம்..
சமைத்துத் தர ஒரு இயந்திரம்..மண் குடிலின் கிழிந்த பாய்களாய்
இன்னும் பெண்கள்..!
விடியலை தொடவேண்டும் விழியே
திறந்து கொள்.! உன் சிறைக் கதவை.!
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...






