பொங்கலோ பொங்கலென்று பொங்குதின்பத் திருநாள்
தை பொங்கி வழி சிறக்க வந்தாய் இறை மகளே
பொங்கலோ பொங்கலென்று தரணி எங்கும்
பொங்கிதே தமிழரின் தைத் திருநாள்
அந்திமம் நீக்கி ஆதவன் வருகிறான்
பழமை போக்கி புதுமை கூட்டி
வரவுகளாலே வாசனை தூவி
அன்பிணைப்பில் ஆனந்த மழையில்
பொங்கும் பொங்கல் இன்பத் திருநாள்
புத்தாடை கட்டுங்கடி சித்தாடை உடுத்துங்கடி
மத்தாப்பு விண்ணிலே மாறாப்பு மூடுங்கடி
விளைந்த நெல் அரிசி குத்தி
பாசிப்பயறு சேர்த்தெடுத்து
பொங்கிதே பொங்கல் கோலம் இட்ட முற்றத்திலே
கருப்பஞ் சாற்றில் பயறுட்டு பக்குவமாய் இறக்கிங்கடி
பட்ட துன்பம் யாவும் தீர்த்து
உற்ற துணை உரிமை சேர்த்து
நித்தம் நீடூழி நித்திலம் வாழ
பொற் கதிர் வீசி அகவிருள் போக்கி
செயற் பெரும் துணை கருணை சேர்த்தே
இப்புவியில் இடர் களைந்து இனிதே வாழ்வோம்
பொங்கலோ பொங்கலென்று பொங்குதின்பத் திருநாள்
தை பிறந்து வழி சிறக்க வந்தாய் தை மகளே வாழிய நீ
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...