mardi 9 octobre 2018

கூறடி சிவ சக்தி!!


செல்பிக்குள்ளே என்னை வைத்தேன் செல்லம்மா
செங்குருத்து வாழை என்றாய் தேனம்மா
தண்ணீரில் ஓடம் இது அம்மம்மா
கரை இருந்தும் கானல் மீனே நானம்மா
துடிக்கிதே மனசு துவளுதே கொலுசு
சதி பதி இன்றி தாழ்வதேன் உறவு
விதியென சொல்லேன்
மதியும் துலைத்தேன்
எதுவரை என்பது தெரியலையே

பிரம்மன் படைத்தான் ஏன்தான் என்னை
அவனையும் இங்கே காணலையே
நீரடி ஊற்றுக்கு நிலை ஏது அறியேன்
தேரடி நிழலையும் தேடியே அலைகிறேன்
தூற்றுவார் தூற்றவும் போற்றுவார் போற்றவும்
போகட்டும் என்றேன் பொன் மனம் உடைந்தேன்
கூறடி சிவ சக்தி கூற்றுவன் குறை ஏதோ

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...