mardi 9 octobre 2018

மாயம் அறியேன் !!!


பூ வானமாய் அணைத்து - என்னில்
பூ கொய்து போனவனே
நீ அவிழ்த்து போட்ட காதலில்
ஐயம் கொண்டேன் ..!

ரெட்டை சடை பின்னி குட்டை பாவாடை கட்டி
தண்ணீர் குடம் தூக்கி போன என்னை
வடம் போட்டு இழுத்தாய் எப்படி ?

மாய விழிகளின் மன்னன் நீ
ஏதோ என்னிடம் தேடினாய்
விடை தந்து வளைந்தன
அந்த வான வில்லின் வர்ணங்கள் 
என்னவனே அன்றுதான் உணர்ந்தேன் 
நானும் வயசுக்கு வந்துவிட்டேன் என்று

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...