samedi 24 février 2018

காதலால் கனிந்தேன் அபிராமி !!!


புன்னகையாலே பொன் நகை மிரள
சிந்துகிறாய் முத்துச் சிதறல்
உன் கண் நகை வாங்கி
வரி வளை எழுதி
கனிந்தேன் அபிராமி
நின் கழல் போற்றி போற்றி

நெரிஞ்சி காட்டில் குறிஞ்சி நீயடி
பிறவி பெருங்கடல் நீந்துவார் நீந்த
அடி முடி காண்டேன் என
தாளம் பூவொடு
பொய்ச் சாட்சி தருவேனா

வாழ்வென்றும் தாழ்வென்றும்
வாசலில் கோலங்கள்
கூண்டேறி நின்றாலும்
காடேகும் போதிலும்
சொல்லும் நா உன் நாமம்
கணமும் மறவேன் தாயே
தோல்வி நிலையென துவளேன்
கூட்டிப்போ உன் திருவடிக்கே
தாழ்விலும் உயர்வுண்டு
கனிந்தேன் அபிராமி
நின் கழல் நினைந்தடி 
போற்றி போற்றி போற்றி

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...