vendredi 6 octobre 2017

கேட்டு வாங்கிவேனா மாலை....

கேட்டு வாங்கிவேனா மாலை கொடுத்து சிவந்தன எங்கள் கைகள்
மாலையும் மலர் சென்டும் கோவிலுக்கும் கட்டும் வித்தகர்களே நாம்
பதினாறில் ஆண்ட மாலை அறுபதிலும் தினம் ஆளும் அரசன் இவன்
காயம் செய்யாதீர், நீவிர் செய்யும் மாயம் அறிவோம்
மாய மான்களை தோற்றுவித்து
தூய பணியினை கொல்லாதீர்.....

ஐந்து ரூபாய் தலைமை ஆடும் அகங்காரத்தில்
முன் துணை தூண்களும் வீழ்ந்திட
வயது பத்தினை தொட்ட பிள்ளையின்
நிதியில் நோய்மை ஒற்றுமை கட்டில் விரிசல்
அன்புக் கென்றும் அடைக்கும் தாழ் போட்டறியோம்
அணைத்த கையினை முறிக்க எண்ணாதீர்
அபயம் என்ற குரல் யாருக்கும் அழகல்ல
இக் குழந்தையின் தாயுமானவன்


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...