jeudi 19 octobre 2017

முக்தி கொடு பக்தனுக்கு !!!

கொத்தளந்து நீ கொட்டும் உன் முத்தாரச் சிரிப்பில்
முத்து பரல்களை கோவை இதழ் இடை கண்டேன்
பௌர்ண முகத்தில் இரு கரு நிலாக்கள் நின்று
காந்தமாய் என்னை கவர்ந்தீர்க்க
தோகை இமை இரண்டிலும்
கரு மையாய் கலந்து
உன் பூ விழி கலந்தேனடி

என்னை நீ கட்டிக் கொள்ள உன் நெற்றியில்
குட்டி நிலவாய் நான் ஒட்டிக்கொள்ள
வண்ண மலர்களும் உன் கேசம் தழுவி                
வாசம் வீசின….
அம்பறாத்துணியில் அம்புகளேதும் இல்லை
உன் புருவ வில் இரண்டிலும்
அன்பெனும் அம்பேற்றி
ஏன் கொன்றாய் என்னை ?
உயிர் உன்னோடுதான் வாழ்கிறேன் இன்னும்
சக்தி உமையானவளே முக்தி கொடு உன் பக்தனுக்கு


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...