samedi 26 septembre 2015

சீதணம் .....



சின்ன வெளிச் சீமையிலே சீமந்தம் தேடும் சின்னவனே
சீதணச் சந்தையில் என்ன விலை உன் விலை
கருப்பஞ்சாறே விருப்பம் உனக்கு
கரஞ்சி எதற்கு கறுப்பாய் அதற்கு
சுட்டு விரல் நீட்டாதே சுட்டுவிடும் நெருப்பு
தன்மானம் இழந்த மனுசா
மண்ணில் பெண்ணே மின்னும் பொன்னடா
பெட்டகம் திறந்து அள்ளி எடு அள்ளக்குறையா அச்சயம் அவளே
நிந்தனையாலே வாசம் இழந்து பூவே புயலாய் வீசுகிறாள்
பூவின் வாசம் நுகரும் வண்டே உன்னை கொடு தன்னை தருவாள்
வாழ்க்கை பாட ஓடமே சாக்கடை நீரில்  இன்னும் ஏன் நீ
செல்லரித்துப் போகும் வாழ்வே நாளை உனது
சீதணச் சந்தையில் என்ன விலை உன் விலை...
kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...