mercredi 9 août 2017

அன்புத் தெய்வங்கள் !!!!!

முத்து முத்தாய் மழைத் துளி முத்தம் ஏன் வருகிது - நீ
கப்பல் கட்டி திரவியம் தேட வாசல் வந்து வாழ்த்துது

நித்தம் நித்தம் வரும் சூரியன் நில்லாமல் ஏன் எரியுது
உலகை நினைந்து உள்ளம் நொந்து
உயிர்களெல்லாம் விடியல் காண தன்னைத் தானே எரிக்கிது

உலகப் பந்து உருளும் விந்தை உன்னில்தானே தெரியுது
நீயும்தானே விண்ணாய் உயர்ந்து வைரம் தீட்டி சிரிக்கிறாய்
ஊதக் காற்று நெரிஞ்சிக் காட்டில் ரெத்தம் கொட்டி அழுதாலும்
தென்றல் காற்றே உயிரின் மூச்சாய் சுவாசம் தந்து வாழ்த்துது
நீரும் நிலமும் காற்றும் ஆகாசம் பூமியும்
அன்பு செய்யும் தெய்வங்களே
வாழ வைக்கும் தெய்வங்களை
வாழ்த்தி வணங்குவோம் அனு தினமே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...