mardi 14 janvier 2014

தை பிறந்தது, தைத் திரு நாளென்று..

தை பிறந்தது, தைத் திரு நாளென்று
பொங்கலை பார்த்தது கிடையாது
எங்கள் உதய வானில்
திங்களை பார்த்ததும் கிடையாது
வாடகைச் சுவருக்குள்
அடுப்படிக் கல்லில்
ஆத்தா அவித்துக் கொடுத்தாள்
அச்சு வெல்லத்தோடு அரிசி
இதுதான் பொங்கலாம் !
தமிழர் திரு,நாளென தமிழர் கொண்டாடும்
போகிப் பொங்கல் இதுதான் என்றால்
தவறில்லைத்தான்..

இன்னும் என்ன இருக்கடா என் தமிழா
வாழாமல் நொந்து கெட்டும்
வாழ்த்துரைப்பதுதான்
எம் வாழ்வில் மிச்சமா ?
மெழுகி கோலம் இட முத்தமும் இல்லை
தழுவி பாய் விரிக்க தாய்நிலமும் இல்லை
வாகை சூடி வாஞ்சை கொண்ட
அந்தத் தமிழீழம் என்று மலருதோ
அன்றேதான் தமிழர் திருநாள் தமிழா
வாழ்த்துரைத்து பொங்கலாம்
வென்றே நீயும் வாடா..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...