dimanche 12 janvier 2014

எண்ணம் என்னும் கோட்டைக்குள்..


எண்ணம் என்னும் கோட்டைக்குள் - ஆகாசப்
பூக்களை தோரணம் கட்டியது யார்
விதையில்லா விருட்சத்தின்
ஆசை நூலில் ஆடும் ஆயுள் கைதி நான்

இமையோடு இமை தழுவி இடை கொள்ளும் வேளை
விழியில் விம்பங்கள் தெரியாமல் ஒளிவதில்லை
தணிந்தது தாகம் என்று பாகம் பிரிக்கவில்லை
பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே

பாடை வளர்த்தி தோள் தூக்க
நால்வர் அருகில்
ஆயுள் முடிவின் நொடிப்பொழுது
எண்ணப்படுகிறது எனக்கு
இப்போதும் ஆசைத் துறவியல்ல நான்
முள் விரிப்பில் கிடந்தும்
மரண தேவனை வா வா என்றே
அழைக்கிறேன் ஆசையுடன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...