mardi 10 décembre 2013

கவிச்சாரதிக்கு, இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்...


பாரதி கவிச்சாரதி
  
   எண்ணம் எனும் தேரில் – வண்
   ணம் மாறா வாழ்வில் நீ வாழ்கிறாய்
கவியே நீ வாழ்கிறாய்
     கட்டவிழ்ந்த நதியிலும்
     காடு மலை மேட்டிலும்
     சொட்டு மலர் தேனிலும்      
     நீ வாழ்கிறாய்
     கவியே நீ வாழ்கிறாய்

கொஞ்சுங் கிளியாள் கூண்டுக்குள்ளே
     பஞ்ச வர்ணம் கலையக் கண்டு
     நெஞ்சத் தீ நெடுவளர்த்து
     மஞ்சத்திரை மாற்றியவா
வேல் விழியில் தீ வளர்த்து
தீயவரை தான் அழித்து
உன் இறப்பை மீட்டெடுத்து
தசையினை தீ சுடினும் சுடட்டும் என்றே
தமிழீழத் தங்கையர்
ஈழத்திலே மீண்டும் உன்னை பிரசவித்தார்

விஜையனுக்கு பார்த்தன் போல்
     பாமரர்க்கு சாரதி நீ.. பாப்பா பாட்டின் பாரதி நீ..
புவி ஈர்ந்த கவியே புயல் சாயா மதியே
கள்ளிருக்கும் பூவிலும் உள்ளிருக்கும் தேனிலும்
உனை காண்கிறேன் நான் உனை காண்கிறேன்.
 
(எட்டையபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைதான் நமது சுப்ரமணிய பாரதியார்.)

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...