lundi 9 décembre 2013

மலரின் மரணம்..


மலரே நீ அழகே அழகு..
மொட்டாக இருக்கயில்
உன் பட்டு இதழ்களை
தொட்டதில்லை சூரியனும்

சிட்டுக்களின் மகுடி கேட்டு
மொட்டு இதழை ஏன் விரித்தாய்
பட்டுக் குஞ்சம் நடுவே
நீ, சொட்டுத் தேன் கொடுத்தாலும்
சிட்டுக்கள் உன் இதழ்கள் மேல்
வைத்துப் போவது ரணங்களின் வடுவே

அழகெல்லாம் உன்னிடம் கொடுத்தவன்
உன் ஆயுளை ஏன் சுருங்கக் கொடுத்தான்
நீ, துயரக் கடலில் மூழ்குவதை கண்டுதானோ...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...