samedi 7 juin 2014

நான், சிரிக்கிறேனா.. அழுகிறேனா..

நான், சிரிக்கிறேனா.. அழுகிறேனா..  
எனக்குள்ளே விடை கிடைக்காத கேள்வி இது
ஊருக்குள்ளே உயர்ந்தவள் என்கிறார் என்னை.!
நொடிக்கு நொடி என் இதயத்தில்
எத்தனையோ ஓட்டைகள்
இன்னும் அடைக்கப்படவில்லை
உயிர்க் கூட்டுத் துடிப்போடு எனைக் காண
ஒவ்வொரு நாளும் வருபவர்
உயிரோடும் போகிறார்
சிலர் பிணமாகிப் போகிறார்..
 
செவிப் புலன்களை திட்டித் தீர்க்கிறது
அனுதினம் நான் கேட்கும் அழுகுரல்
ஈர் ஐந்து திங்கள் உடலுக்குள் உயிராக்கி
கையேந்தும் காலத்தில் உயிரற்ற சிசு ஏந்தி
கனாக்காலம் கரைந் தோட
கடல் நீரை கையாக்கி
இவள் ஊற்றும் கண்ணீருக்கு
ஈடென்ன நான் செய்வேன்..?
யாருக்காக அழுவேன்
நான் யாருக்காகச் சிரிப்பேன்
என் தவக்கால வாழ்வில்
ஜடமாகித் தேய்கிறேன்..!
 
இமைக் கூட்டுக் கடிகாரத்துக்குள்
முள்ளாகச் சுத்துகிறது
என்னை நெருடும் ஒவ்வொரு
நொடிப் பொழுதும்.!
நான் யார்..? நான் யார்..? நான்
யார் என்ற கேள்வி எனக்குள்ளே
எத்தனை முறை நான் கேட்பேன்
எல்லோரும் என்னை,
மருத்துவ மனை என்கிறார்..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...