lundi 16 juin 2014

வடக்கில் வசந்தம் என்றார் ...

வடக்கில் வசந்தம் என்றார்
சுனாமி வந்துவிட்டுப் போன
அடிச்சுவடுகள்
அப்படியே கிடக்கின்றன...!
சத்தம் போடாதீர்கள் இறுதி யுத்தம் என்றார்
அடுத்து, தமிழர்க்கு சுதந்திரம் என்றார்..
காலையில் குளித்துவிட்டு காயப்போட்ட
கோமணத் துண்டையும் காணவில்லை ..!
மீண்டும் கருக்கல் கட்டுகிறது
காரிருள் நடுவே நால்வர்
படலையே இல்லாத என் வீட்டை
முற்றுகை இடுகிறார்கள்.. ..  ...!
 
ஐயா என்னை காப்பாத்துங்கோ...
இது என் குமர்ப்பிள்ளைகளின் கதறல்
நான் எழுந்து உதவும் முன்னே
என் முகத்தில்
சப்பாத்துக் கால்களின் உதைகள் .. ..!
நித்திரை கொள்ளவில்லை நான்
என் கண்கள் இருட்டிவிட்டன
விழி திறந்த வேளையில்
காலைச் சூரியன் வந்திருந்தான்
என் பிள்ளைகளை காணவில்லை .. ..!
புயல் வந்துவிட்டுப் போன
சிதைவுகளை கண்டு நடுங்கி நின்றேன்
தொலைவிலிருந்து ஒரு ஒப்பாரிச் சத்தம்
ஐயோ.. யாரு பெத்த பிள்ளைகளோ
படு பாவிக இப்படிச் செய்திட்டு
போட்டிருக்காங்களே...!
ஓடுகிறேன் அந்த ஒப்பாரி இடத்திற்கு
நேற்று யார் யோரோ எல்லாம்
அழுகுரல் கேட்டு ஓடினார்கள்
இன்று நானும் ஓடுகிறேன்..
எமைக் காத்த கடவிளே நீ இல்லையேல்
இதுதானா தமிழரின் நியதி ...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...