mercredi 9 avril 2014

கண்டேன், கலங்கரை விளக்காய் ஒளிமுகம்..!


வட்ட  நிலா எழுந்து சுட்டு விழி காட்ட
பட்டு இதழ் பார் என்று
வண்ண ரோஜா சொல்ல
கண்டேன்,
கலங்கரை விளக்காய் ஒளிமுகம்..!

ஆளக்கடலிலும் காணக்கிடையாத
முத்துக்களோ இவள் கண்கள்...
அள்ளிக்கொண்டேன்
கருவண்டுகள் இரண்டு
என் கையை கடித்துவிட்டன..!
கட்டுக் குலையா மொட்டு ரோஜாவே
கவலை கொள்வேனா.?
காத்திருக்கிறேன்..
நம் கல்யாணக் காலம் வரை...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...