vendredi 4 avril 2014

வெட்டி எடுக்கையிலே வேதனையுற்றேன்....


வெட்டி எடுக்கையிலே வேதனையுற்றேன்
சுடு தணல் கொட்டிக் கொட்டி
உருக்கையிலே, அழுதும் விட்டேன்
என் கண்ணீர் கண்டும் கரையாதவர்
இவர் மனிதரே அல்ல என
திட்டியும் தீர்த்தேன்...
இப்போது என்னை
அள்ளி அணைத்து
ஆசை முத்தம் தருகிறார்கள்!
அளப்பரியது இவர் மனசு
நகைக் கடையில்
தங்கம்..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...