dimanche 27 avril 2014

மேகம் இருளவில்லை....


மேகம் இருளவில்லை ஒளிக் கீற்றுகள்
ஆங்காங்கே அலைமோதி
என் கண்ணை பறிக்கின்றன..!
அட அது நீதானா..?
கண்ணை பறித்தாலும் தீண்டத் தகாத
மின்னல் இல்லையடி நீ
மொழி இல்லாக் கவிதையாய் நின்று
வாசிக்கச் சொல்கிறாய் என்னை..!
உன் விழிகளை வாசிக்க வாசிக்க
எத்தனையோ மொழிகள் புலருதடி
அத்தனை மொழிகளிலும்
என் அன்னைத் தமிழே ஆதி மொழி என
உன் விழிகள் ஆணித்தரமாய் சொல்லுதடி
அச்சம் தவிர்த்து அகரம் எழுதுகிறேன்
பள்ளி மாணவனாய் நான்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...