dimanche 13 avril 2014

சித்திரை ஒன்று தமிழர் புத்தாண்டாம்...


சித்திரை ஒன்று இன்றென்று – அதி
காலை தட்டப்படுகிறது கதவு
தமிழர் புத்தாண்டாம்
நாள் காட்டியும் சொல்கிறது
உண்மைதான் போலும்..!

என்ன சத்தம் அங்கே...?
ஓர் சிலர்..
சீனவெடி கொழுத்துகிறார்கள்..!
இன்னும் சிலர்..
பகட்டாடையோடு செல்கிறார்கள்..!
வீரப் பிரதாபம் கொள்ளும்
போர்த் தேங்காய் அடிக்கவில்லை
காரணம்,  
யுத்த நெஞ்சுரம் கொண்ட மண் வாசம்...

செம்மொழி தமிழ் என்றான் செரிக்காத ஒருவன்
ஆறறைகோடி தமிழன் இருந்தும்
அம்மொழியே அம்மணமாய் கிடக்கிதடா
ஆறடி நிலமும் சொந்தம் இல்லாத் தமிழா
உனக்கொரு நாடு வேண்டுமடா
அன், நாள் காணும் பொன்நாள் எதுவோ
அதுவே தமிழரின் புத்தாண்டென கொள் நீ
புது யுகம் காண புயலாக எழு எழு
அனல் மின் அல்லடா அணுவுலையே நீதானடா...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...