vendredi 11 avril 2014

நதியும் கரை தாண்டி ஓடுகிறது....


விதி, என்றார் முன்னோர்கள்
கண்ணுக்குத் தெரியவில்லை..!
நதி என்றார் உண்மைதான்
அகிலம் அறிகிறது....
காட்டு வெள்ளம் புகுந்ததால்
நதியும் கரை தாண்டி ஓடுகிறது
ஆனாலும் இரு கரை இன்னும் இருக்கிறது
நேற்று பிறந்த நான் கூற்று கூறமுடியுமா..?
உன்னை என்னை மீறிய அருவம் மட்டும்
அசைகிறது புலப்படவில்லை
நான், நான் என்று வாழ்ந்தவர் யாரும்
ஏன் என்ற கேழ்வியை கேட்காமல்
இறந்ததில்லை...
விதியும் மதியும் இரண்டுதான்..!
இரண்டுக்கும் இருகரை நீயும் நானும்தான்
இணையின்றி எப்போதும் எனியும் எவரும்
தனித்துவம் கொண்டதில்லை, கண்டபின்
நீயும் ஞானிதான்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...