mercredi 5 mars 2014

உருகும் துளியே பெருகும் நதியே...


உருகும் துளியே பெருகும் நதியே

விழிவழி ஓடி நெஞ்சை வருடுகிறாய்

உன் குளிர் முகம் எரித்து

குறு நகை அறுத்து

துளி விஷம் இட்டே போய்விட்டார்

நீ நிலை தளராதே நெஞ்சுருகாதே

வஞ்கர் வருவார் உன் நிழல் தொழவே

நாணலாய் ஓடி நாநிலம் தழுவி

சரித்திரம் படைத்துவிடு

அழைக்கிறேன் உன்னை கால நதி...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...