lundi 24 mars 2014

நீயும் நாயகன்தான்...


உலகம் உனதே உனதானது
உசிரும் உனதே உனதானது
விதியே விதியென நினைந்து
விழியை நனைக்காதே
நாளை உனதானது..!
பாசம் வேசம்தான்
பயிர்முகக் கோலம்தான்
உயிரே பிரிந்தாலும்
உள்ளம் கரையாதே
காலம் ஒரு கணக்கே
காகிதப் பூ இருக்கே
வாசம் மோசம் செய்தாலும்
நிறங்கள் நீங்கி வாழாதே...
வாழ்க்கை நாடகம்தான்
நீயும் நாயகன்தான்
வானம் எல்லைதான்
வாழ்ந்தே தொட்டுவிடு...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...