samedi 15 mars 2014

ஓடிவிட்டாளாம் என் சாந்தி...


ஓடிவிட்டாளாம் என் சாந்தி - அம்மா
கொதிக்கும் உலை அடுப்போடு
சிணுங்கிய வண்ணம்,
மூக்குச் சீறிக்கொண்டிருந்தாள்...
அப்பா பேசியிருக்கவேண்டும் போல்
பர பரக்க,
விழித்துக் கொண்டிருந்தான்
என் தம்பி - இவன்தான்,
நான் ஆசையுடன் வளர்த்த
என் சாந்தியை
அவிழ்த்து
விட்டிருக்க வேண்டும்
இன்று பௌர்ணமி
வீதி எங்கும் நாய்களின் ஓலம்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...