dimanche 9 novembre 2014

ஆகாசம் தொடும் ஆலும் விட்டகலவில்லை ..


ஆகாசம் தொடும் ஆலும் விட்டகலவில்லை
பற்றி நிக்கிறது பாதங்களால் தாய் மண்ணை
வரப்புகள் வளி நின்று உரம் கூட்டும் அறுகும்
பற்றி நிக்கிறது வேர்களால் தாய் மண்ணை
கொடி இடை நீந்தும் தாமரையும் நீரடி சென்று
பற்றி நிக்கிறது நர்த்தனக் கால்களால்
தாய் மண்ணை.. ..
 
வெண் பனிச் சாரல் பட்டும் வெந்திடும் மனமே
உன் அடியில் எங்கே தாய் மண்
உன்னை என்னைத் தாங்கி உலகின் கண்
அறிமுகம் தந்தது தாய் மண்ணல்லவா...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...