mardi 4 novembre 2014

வாராது வரும் மரணத்தை எண்ணி ...


வாராது வரும் மரணத்தை எண்ணி
வருந்தும் மனுடா
உறவின் மரணங்களில் உன்னையே
மரணித்தவன் நீ இன்னொரு மரணம்
உனக்கில்லை இனி
உயிரே உறவே என்றவரே
உன்னையும் பிணம் எனக் கூறி
சுடும் நிலை நீ அறிவாய்
இன்னுயிர் நிலைத்திட
ஏதே தோ செய்கிறாய்
எங்காச்சும் கண்டாயோ
அதற்கொரு சரணாலயம்
இருள் அகற்றி ஒளி ஏற்று
உன் நெஞ்சே அதன் சாந்தி நிலையம்
மரணத்தை மரணமே வெல்லும்
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...