mercredi 19 novembre 2014

சாக்கடையில் புனிதன்.. ..


சாக்கடையில் புனிதன்.. ..
கவர்ச்சிக் கடலில் மனம் ஏறும் தோழனே    
உன் நாளங்கள் அகற்றிய நாசிக் கூடத்தில்
தூயவன் இவன் இங்கே
சாக்கடை அகற்றி சந்தணமாகின்றான்.. ..
படைத்தவன் கூட வருவதில்லை
கூவத்தில் குன்றிச் சாகும் உன்னை காத்திட
 
வணங்க இரண்டு கைகள் இருந்தால்
 உன்னை காக்கும் கடவுள் இவனே
கோயில் வேண்டாம் சிலையும் வேண்டாம்
தெய்வம் என போற்றவும் வேண்டாம்
தொட்டால் தோசம் என விட்டு ஓடாதே
மனிதனை மனிதனாய்த் தழுவி
யாதி ஒளிப்பை ஏற்றுக்கொள்
நீதிமான் நீயேதான்....
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...