vendredi 24 octobre 2014

மண் சட்டி சோற்றுக்கும் மீன் கறி குளம்புக்கும்..


மண் சட்டி சோற்றுக்கும்
மீன் கறி குளம்புக்கும்
அன்றொரு வாசம்
என் மன்னவன் மகிழ்ந்து
புன்னகை பூத்திட
நடு நிசியும் தோக்கும்
 
இன்றைய வாழ்வுக்கும்
இல்லற ஜோதிக்கும்
இரும்பறைக் காலம்
இதில் பந்தமும் பாசமும்
பாஸ்பூட் பரிமாறி பறக்கின்ற காலம்
நடு நிசி ஏதென்றும் நண்பகல் ஏதென்றும்
யாருக்கும் தெரியவில்லை
எதிர் காலக் கனவை தண்ணீரில் எழுதியே
எல்லோரும் எங்கோ போகின்றோம்..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...