jeudi 2 octobre 2014

என் விழி வளி தேடும் என்னுயிர்த் தோழா ..


என் விழி வளி தேடும் என்னுயிர்த் தோழா
இன்னுயிர் விண்ணுயர் காணும் முன்னே
விரைவில் நீ வந்துவிடு..
இடர் காட்டில் நான் இங்கே
வெளி நாட்டில் நீ அங்கே
முடியாத கவிதைக்கு
முற்றுப் புள்ளி ஏதடா
தெரு நாய்கள் கூட
விழி யாடை செய்கிறது என்னிடம்
துடப்பங் கட்டை கண்டதும்
தூரமாய் குலைக்கிறது
போதும் போதும் என்னவனே இடைவேளை
இளமைக் காலம் இது இனிமை காய்கிறது
பணம் தேடப் போனவனே
என் பிணம் வீழும் முன்னே
விரைவில் நீ வந்துவிடு...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...