mercredi 17 septembre 2014

உன்னிரு விழிகளும் சொல்கிறதே நான் மாணவன் தான் ..


உன்னிரு விழிகளும் சொல்கிறதே நான் மாணவன் தான்
கொங்கைகள் எழுந்து சொல்கிறதே நீ எழில் ஓவியம் தான்
மன்மத பானம் அள்ளியே கொடு
இதழ்ச் சரம் எங்கும் சுரங்களை இடு
மதனும் ரதியும் இன்னொரு காலம்
இதுபோல் இதுபோல் காணாது போகணும்
ஆனந்த லோகம் அள்ளியே கொடு..
சோளக் காட்டுப் பொம்மைகள் கூட
சொக்கிப் போச்சுதடா
வில்லாளா உன் அம்பில் வீழ்ந்தே
கிறங்கிக் கிடக்கிதடா
ஒரு முறை என்ன  பலமுறை தொடு தொடு
வீழ்ந்தே வீழ்ந்தே எழுவேனே் நான்
அணையாத் தீ என்னை அடக்கிப் போடா
துரோணர் எதற்கு ஏகலைவன் உனக்கு
வித்தைகள்  சொய்தே அம்பினை விடு
பாஞ்சாலி நான்தான் பாவங்கள் நீக்கு
தீயினில் தீயட்டும் நாம் தீண்டிய இரவு..

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...