samedi 16 août 2014

கப்டன், அங்கயற்கண்ணி ..


கொடு நிலை உளன்று சிறு நிலை அகற்றி
கடல் கலம் தனை எரித்த கனலே
உன் உயிரே உனக்கு துச்சமடி
தமிழீழ விடுதலை ஒன்றே உனது நேசமடி
தலைவன் பிரபாகரனின் தங்கை நீயல்லவா
வீரப் புலிப் படையணியின் புயலல்வா
நீரடி மூழ்கி பேரிடி முழங்கி கந்தக வெடியில்
கயவரின் போர்க் கப்பலை எரித்தாய் ..
யாரடி உனக்கு நிகர் சொல்
பாரதி இன்றில்லை காண்
நீயே புரட்சி பெண்ணின் முதல் படைப்பு
இனியும் பணியாது பெண்ணினம் மிதி பட்டு
உன் நினைவலை ஏறி நின்னடி தொழுகிறோம்
வீரத் திருமகளே நீ வாழி ....

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...