vendredi 12 septembre 2014

எரிமலை அருகில் இல்லை எரிகிறது மனசு ..


எரிமலை அருகில் இல்லை எரிகிறது மனசு
விதை நிலம் இங்கேயும் உண்டு
மழைக்கும் தெரியவில்லை
மானுட உடலில் எத்தனை எலும்புகள்
எண்ணுங்கள் எமதுடலில்
எக்ச்றே படம் தேவை இல்லை
ஒரு பிடி உணவுக்கு ஏங்கியே
வயிற்றுக்கும் நாவுக்கும் இடையில்
எமது வாழ்வில் நடக்கிறது போராட்டம்
பூலோகம் என்று யார் சொன்னார்
எங்கள் பூமியில்
சாமிகளும் செத்துவிட்டன
உங்களூர் சாமிகளை கண்டால்  
கொடுங்கள் எங்களூர் விலாசத்தை...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...