vendredi 15 août 2014

ஆகாசம் தொட்டு வளர்ந்தாலும் ..


ஆகாசம் தொட்டு வளர்ந்தாலும்
தாய் மண்ணை பிரியாமல்
பதித்து நிற்கிறது தன் பாதம்
அந்த ஆல மரம் ..
 
வெண் பனிச் சாரல் தொட்டும்
வெந்து துடிக்கும் மனமே
உன்னை என்னை
உலகின் கண் அறிமுகம் தந்தது
அந்தத் தமிழீழ மண்ணல்லவா ..
ஆலைப் போல் அறுகைப் போல்
பாதம் பதித்திட வாடா என் தோழா
அழைக்கிறது தாயகம் ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...