mardi 5 août 2014

முதுமை தொடாத இளமை வனம் இன்னும் என்னிடத்தில் ..


முதுமை தொடாத இளமை வனம்
இன்னும் என்னிடத்தில் ..
என்னவன் இளப்பில் மரணித்தவள் நான்
தாவாரச் சாரல்கள் வந்து நனைப்பதால்
துளிர்க்கிறேன்  துவள்கிறேன்
இள மனசு இன்னும் இறக்கவில்லை ..
ஜன்னல் ஓரத்து நிலா வந்து
என் முகம் காண்கயில்
ஒரு வாசகம் பேசத் துடிக்கிறேன் ..
வெள்ளைப் புடவை தந்து வேர் அறுத்தவர் அருகில்
தூறலே ஏன் இன்னும் நீ மண்ணுக்கு வருகிறாய்
விண்ணுலகம் அழைத்துப் போ நானும் வாறேன் ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...