mercredi 28 octobre 2015

என் டயரி ...

வாழ்க்கை எனும் பாடத்தை வழி மொழியும் மனமே
செயல் முறை பாடத்தில் தேர்வெழுதும்
மாணவன் நான் ,,,,
எதிர்காலப் பக்கங்களில் எழுதுவதை கொடுத்துவிடு
இறந்த கால கிழிசல்களை நிகழ் காலத்தில்
நெறி முறை செய்துடுவேன்

உள்ளிருக்கும் உனக்கென்ன கள்ளிருக்கும் பூ நான்
ஊற்றுக்கள் சுரந்து உமிழ்கின்ற தேன் எடுத்து
நாவிற்கும் சுவைக்கும் நடு இருந்து
நற்தனம் ஆடுகிறேன்
கறை காணும் கனவுகளில் தள்ளி கனல் மூச்சு இறைக்கின்றாய்
விடியா இரவுகளில் வீழ்த்தி  உலர் பூவாய் உதிர்க்கின்றாய்
மலரும் போதில் நறுமணம் தெரியுது மனம் உதிரும் போதில்
உலகே வெறுக்குது
பொய் அன்றி மெய் உணர ஜனனத்தின் மேன்மை புரியுது
கருத்தில்லா கனவுகளில் தள்ளிவிடாதே எழுத்தில்லா ஜாதிகளை
எழுதச் சொல்லாதே
நிலை இல்லா வாழ்வில் நிம்மதி இல்லை எனில்
எழுத மாட்டேன் உன்னை நான், இனி என் வாழ்வில் ...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...