vendredi 16 octobre 2015

அலாரம் அடிக்கிறது ......

கடமை எண்ணி கடிகாரமாய் ஓடிக் கொண்டிருந்தேன்
கனதியான வாழ்க்கை !
ஓய்ந்தாலும் அலாரம் தந்து எழுப்பிவிடும் கடிகாரம்
என்னை எழுப்ப மறந்து அது ஓய்ந்திருந்த அந்த ஒரு நாள்
அடித்துவிட்டேன் கோபம் கொண்டு அதனை
ஆனால் இன்றோ
அலாரம் அடித்துக் கொண்டே இருக்கிறது என்னை எழுப்ப
நான் முற்றாக ஓய்ந்துவிட்டேன் என்பதை அறியாமலே அது!
அழைப்பாணை இன்றி என்னை அழைத்து வந்த இயமன்
கடிகாரத்தை பார்த்து சிரித்துவிட்டே வந்தான்.....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...