vendredi 23 octobre 2015

நண்பா நண்பா நீ இன்றி நானா ....

ஆகாயம் கண் இருத்தி ஆரத் தழுவுது மனசு
பெருங் குடை ஆல விழுது பற்றி 
அன்புக்கு நான் அடி பணிந்தேன் 
பிரிவெனும் கொடுமை கத்தரித்தால்
கொலைக் களம் சென்றே  உயிர் திரிப்பேன்
அறுகம் புல்லும் நீயேதான்
அதில் தூங்கும் பனித்துளி நானேதான்
அடை மழை என்றால் நீ குடையானாய்
கொடு வெயில் என்றால் நான் நிழலானேன்
இலக்கணக் கற்கள் உன் இதயம்
அதைத் தாங்கும் அகரம் என் நேசம்
நடுகல் நட்டு நாளாச்சு உறவுப் பாலம் விரிவாச்சு
ஊரே நடக்கிது உள மலர்வில் நட்பே உனக்கு உயிராவேன்...
 Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...