vendredi 9 octobre 2015

எதிர் வீட்டு யன்னல் .....

காதல் வந்தது காதல் வந்தது என்  வீட்டு நிலைக் கண்ணாடிக்கு
உன் வீட்டு யன்னலில் தான் ஓர விழி கொண்டதடி
கண்ணுக்குள் கண்ணை வைத்து தன்னகத்தே உன்னை வைத்து
உன் வீட்டு யன்னல் கம்பியில் என்னை சிறையிட்டு சிதைக்கிதடி
பூட்டி வைத்த நெஞ்சுடைத்து பூகம்பத்தை மூட்டிவிட்டு
கரு நீள் கூந்தல் அவிழ்த்து சாமரை நீ வீசுகிறாய்
விரல்கள் பாடும் வீணையின் நரம்பாய்
ஏழு சுரங்களும் எனக்குள்ளே
பல்லவி நீ அங்கிருக்க  அனுபல்லவி சரணம் கொள்வதேதடி
தாலி தாறேன் வாயேன்டி என் தாரம் நீதானே
முன் வாசல் வந்துவிடு
மூடுபனி வீழ்ந்தாலும் முத்தெடுப்போம் தடை ஏது ....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...