lundi 29 septembre 2014
dimanche 28 septembre 2014
விலாசம் அற்ற மந்தையாய் வீதியில் மனிதன்..
விலாசம் அற்ற மந்தையாய் வீதியில் மனிதன்
அச்சடித்த வாக்குச் சீட்டில் அழ கழகாய்
அவனின் பெயர்..
வறுமைக் கோட்டின் வரிகளை
படம் பிடித்து காட்டிக் கொண்டிருக்கிறது
கடந்த தேர்தலில் கிடைத்த புத்தாடை
அவன் மேனியை கந்தல் கந்தலாய்..
அரசுடமை களவாணிகள் கட்சிக்
கொடியுடன்
ஐந்தாண்டுக் கொருமுறை வேட்டித் துண்டுடன்
குசேலரின் வாக்குச் சீட்டில்
கறுப்புப் பண குபேரர்கள் நாற்காலியில்..
அங்கம் எங்கும் தங்க நகை
அது உறங்க பணக்கத்தை மெத்தை
வீதி வாசி ஓலைப் பாயும் இன்றி இருட்டில் .. ..
Kavignar Valvai
Suyen
vendredi 26 septembre 2014
மணித் துளிகள் எண்ணப்படுகின்றன ...
மணித் துளிகள் எண்ணப்படுகின்றன
தினம், பிறந்து இறக்கும் நாட்களுக்காகதன் ஊனினை உருக்கி
உயிரினை நெய்யாக்கி
அகிம்சைப் போரில் நீராகாரமும் இன்றி
எண்ணிக் கொண்டான் மணித் துளிகளை
பன்னிரு நாட்கள் தியாக தீபம் திலீபன்..
அகிம்சையின் தந்தை காந்தி என்றால்
அவனின் தந்தை இவனாவான்
அகிம்சைப் பிளம்பின்
அடியும் முடியும் இவனே..
சுய உரிமை தன்னாட்சி சுதந்திரம் தரவல்ல
தமிழீழமே தமிழரின் தாயகம் என்றான்
அமைதிப் படையென வந்த இந்திய அரசின்
வல்லாதிக்க முக மூடி கிழித்து சிதைத்தான்
இன்றுள்ளேன் நாளையும் இருப்பேன் என
நல்லூரான் வீதியிலே நல்லுரை தந்தவன்
அறவளி நின்று அனலையும் தின்றவன்
என் தாய் எனக்கீர்ந்த
இன்னுயிரை தந்துவிட்டேன்
வெடிக்கும் மக்கள் புரட்சியில்
நாளை பிறக்கும் தமிழீழம் என்றே
இறவா வரத்தில் நீக்கமற நிறைந்து
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே என்றான்....
Kavignar Valvai Suyen
jeudi 25 septembre 2014
இருப்பது சில நாள்!!
இருப்பது சில நாள் !!
உயிரே உயிரே நீ எங்கே எங்கே - உன்
தரிசனம் இன்றித் தினம் நான் இங்கே
நனைந்து காய்கிறேன் இறந்து சாய்கிறேன்
நதியின் நீரை விழியும் பெருக்கி
சிவந்து ஏங்கிதே ..
தரிசனம் இன்றித் தினம் நான் இங்கே
நனைந்து காய்கிறேன் இறந்து சாய்கிறேன்
நதியின் நீரை விழியும் பெருக்கி
சிவந்து ஏங்கிதே ..
இருப்பது சில நாள் இடைவெளி பல நாள்
ஊடல், உனக்கும் எனக்கும் பாலமோ
காலம் கரைந்து உலரும் கனாவில்
இலவம் கிளியென இறக்கை விரிக்குமோ ..
தோழனே வா .. வா .. வா ..
உன் தோளினைத் தா .. தா .. தா ..
தேரினை ஈர்ந்த பாரியின் உறவே
ஊடல் போதும் உயிரே வா .. வா .. வா ..
ஊடல், உனக்கும் எனக்கும் பாலமோ
காலம் கரைந்து உலரும் கனாவில்
இலவம் கிளியென இறக்கை விரிக்குமோ ..
தோழனே வா .. வா .. வா ..
உன் தோளினைத் தா .. தா .. தா ..
தேரினை ஈர்ந்த பாரியின் உறவே
ஊடல் போதும் உயிரே வா .. வா .. வா ..
பாவலர் வல்வை சுயேன்
mardi 23 septembre 2014
என்னடா உலகம் இது இதில் இனிமை எங்கே இருக்கிறது ..
என்னடா உலகம் இது – இதில்
இனிமை எங்கே இருக்கிறதுஇன்பம் இரு நாள் துன்பம் பல நாள்
இரு விழி நீரில் நனைகிறதே.. ..
அன்பெனும் உறவில் ஆயிரம் தொல்லைகள்
அனு தினம் நானும் பார்த்துவிட்டேன்..எனக் கொரு பிள்ளை பிறந்துவிட்டால்
என் நிலை எப்படி எடுத்துரைப்பேன்..
பெற்றவர் இல்லை தோள் தாங்க
நால்வர் வரலாம் என் பிணம் தாங்க
இதில் காதல் கொள்வதும் கண்மணி என்பதும்
காலம் விதைத்த பயிரடா
கண்ணீர் சிந்தும் மனிதராலே
கடலே உப்பாய் ஆச்சுதடா
கால தேவனே கருணை இருக்கா
விழி நீர் வற்றிப் போச்சுதடா
என்னடா உலகம் இது – இதில்
இனிமை எங்கே இருக்கிறது.. ..
Kavignar Valvai Suyen
lundi 22 septembre 2014
உயிர் மூச்சு எனக்குள் ஒளிந்திருக்கிறது ..
உயிர் மூச்சு எனக்குள் ஒளிந்திருக்கிறது - என்
பேச்சில் ஒளிவும் நியமும் கலந்திருக்கிறது இல்லை என்றால் நிலை கண்ணாடி என் மேல்
கணை, தொடுப்பேன் என்கிறது...
வாழ்ந்தவரை போதும் என்கிறேன்
போதாது என்கிறான்
என்னொருவன் எனக்குள்ளே...
அடிமைத் தழை இன்றி அங்கீகாரத்துடன்
தாய் மண்ணை தழுவும்
தமிழீழ ஆலமரத்தின் விழுதுகளை
பார்த்துவிட்டுப் போ என்று...
விடிந்த விடியலை அறுத்த வல்லரசுகளால்
தணியாமல் கிடக்கிறது தமிழீழத் தாகம்
விடியுமா விடியாதா என்ற கேழ்வி மட்டும்
மிஞ்சி விட்டது...
மனசில் தெம்பில்லை மார்க்கம் ஏதும் இல்லை
நாளைய மரணத்தை இன்றே வா என தூதனுப்பி
கை,கோர்த்துச் செல்லக் காத்திருக்கிறேன்....
Kavignar Valvai Suyen
vendredi 19 septembre 2014
தென்றலுக்கும் திங்களுக்கும் எங்களுக்கும் தூரம் இல்லைத் தூரம் இல்லை ..
தென்றலுக்கும்
திங்களுக்கும் எங்களுக்கும்
தூரம் இல்லைத் தூரம் இல்லை அஞ்சோம் அஞ்சோம்
யார் கண்ணுக்கும் தெரியோம்
இருண்ட வாழ்வில் இனியும் சிதையோம்..
அடுப்படி வாழ்வும் அகப்பையின் நேசமும்
பெண்ணுக்கே உரிதென்று உச்சிவரி வகுத்தவரே
நஞ்சு மாலை எங்கள் நகையாகும்
நய வஞ்சக நரிகள் எங்கள் பகையாகும்
கடலடி ஆளத்தை கையளவே கொண்டோம்
கடலைத் தோண்டியே கப்பலையும் புதைப்போம்
இது தமிழீழ வானம் தமிழர் கடல் யாகம்
ஏறி வந்த சாகரவர்த்தனவே
எமை எரித்து நீ நிதம் சிரித்தாயோ
எனதுயிர் ஆயுதமே உனதுயிர் காலனடா
இனி உன் தாழ்வு எம் கடலடி ஆளமடா
முழக்கமும் மின்னலும் கூட
நாணம் கொண்டது தமிழீழத் தங்கையிடம்
இடியோடு வெடியாகி பிரகாரமானாள்
கடற்கரும்புலி லெப்டினன் கேணல் நளாயினி...
Kavignar Valvai Suyen
mercredi 17 septembre 2014
உன்னிரு விழிகளும் சொல்கிறதே நான் மாணவன் தான் ..
உன்னிரு விழிகளும்
சொல்கிறதே நான் மாணவன் தான்
கொங்கைகள் எழுந்து
சொல்கிறதே நீ எழில் ஓவியம் தான்மன்மத பானம் அள்ளியே கொடு
இதழ்ச் சரம் எங்கும் சுரங்களை இடு
மதனும் ரதியும் இன்னொரு காலம்
இதுபோல் இதுபோல் காணாது போகணும்
ஆனந்த லோகம் அள்ளியே கொடு..
சோளக் காட்டுப் பொம்மைகள் கூட
சொக்கிப் போச்சுதடா
வில்லாளா உன் அம்பில் வீழ்ந்தே
கிறங்கிக் கிடக்கிதடா
ஒரு முறை என்ன பலமுறை தொடு தொடு
வீழ்ந்தே வீழ்ந்தே எழுவேனே் நான்
அணையாத் தீ என்னை அடக்கிப் போடா
துரோணர் எதற்கு ஏகலைவன் உனக்கு
வித்தைகள் சொய்தே அம்பினை விடு
பாஞ்சாலி நான்தான் பாவங்கள் நீக்கு
தீயினில் தீயட்டும் நாம் தீண்டிய இரவு..
Kavignar Valvai
Suyen
lundi 15 septembre 2014
samedi 13 septembre 2014
கரை புறண்டு விளையாட ..
கரை
புறண்டு விளையாட மழை வரவேண்டும் என்று
காத்திருப்பதில்லை
கடல் - இருந்தும்எதிர் பாராத பரிசம் தந்து
தன் உதட்டில் முத்தம் இட்ட மழையிடம்
vendredi 12 septembre 2014
எரிமலை அருகில் இல்லை எரிகிறது மனசு ..
எரிமலை அருகில் இல்லை எரிகிறது மனசு
விதை
நிலம் இங்கேயும் உண்டுமழைக்கும் தெரியவில்லை
மானுட உடலில் எத்தனை எலும்புகள்
எண்ணுங்கள் எமதுடலில்
எக்ச்றே படம் தேவை இல்லை
ஒரு பிடி உணவுக்கு ஏங்கியே
வயிற்றுக்கும் நாவுக்கும் இடையில்
எமது வாழ்வில் நடக்கிறது போராட்டம்
பூலோகம் என்று யார் சொன்னார்
எங்கள் பூமியில்
சாமிகளும் செத்துவிட்டன
உங்களூர் சாமிகளை கண்டால்
கொடுங்கள் எங்களூர் விலாசத்தை...
Kavignar Valvai Suyen
mercredi 10 septembre 2014
mardi 9 septembre 2014
கள்வனே காமுகனே உன் மந்திரச் சிரிப்பில்..
கள்வனே காமுகனே உன் மந்திரச் சிரிப்பில் – என்
கொலு சொலியை துலைத்துவிட்டேன்..
என் பித்தன் நீ என எண்ணியே
நழுவ விட்டேன் தாவணியை
வலி நிறைந்த வாழ்வுச் சமாதியில்
என் பெயரை எழுதிவிட்டாய்
உன் உயிரணுக்கள் உயிர் கொண்டு
உறுளுதடா என் வயிற்றில்
உன்னை, சிறையிடுவேன் சிதையிடுவேன்
சிரிக்காதே சீண்டாதே நான் கண்ணகி அல்ல...
Kavignar Valvai Suyen
lundi 8 septembre 2014
இன்பமும் துன்பமும் மருந்தென உண்டு ...
இன்பமும் துன்பமும் மருந்தென உண்டு -
உயிர்
கொண்ட கூட்டிலே உளன்றேன் இறைவா
உடல் விட்டுப் போகும் உயிர்
சுடு காட்டு உதிர் நீறாய்
உதிராதே உதிராதே
உன் முகம் கண்டேனடா
தேர் ஏறி வரும் திருக்கோல முருகா
தேகம் சிலிர்த்திட தாகம் தணித்து
மானுடம் அறிந்தேனடா
தணிகாசலனே சரணம் சரணம்
நின் திருவடி சரணம் ஐயா...
Kavignar Valvai
Suyen
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...
-
கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான் நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு விறகென்றாய் கலங்கினேன் ..! இருந்து...