samedi 22 février 2014

குட்டி போட்ட வட்டிப் பணமே..!


குட்டி போட்ட வட்டிப் பணமே..!

நீ விட்டில் ஆனாய் எப்படி..?

உன்னைத் தொட்டெடுத்துப் போன

அந்தத் தெருக் கம்ப விளக்கால்

என்னை விட்டெரிந்து மாண்டாயோ

சொல்லடி..?

யானை வருகிதே.. சேனை விலகிதே..

இனி கேக்காதே.. வளியில் இப்படி..

சேர்த்தே தாறேன் வட்டியும் முதலும் என

எத்தனை நாள் அவள் சொல்லிவிட்டாள்
அனைத்தும் பொய்யடி.!

அவளோ சொல்லுப் பல்லக்கில் ஏறி

போகிறாள்...

நானோ இன்னும் கால் நடையில்

அலைகிறேன்...

காதறந்து கை விட்டுப் போனதடி என்னை

என் செருப்பும்..!

குட்டி போட்ட வட்டிப் பணமே

மாண்டாயோ நீ சொல்லடி..?

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...