dimanche 9 février 2014

விடியலை தொடவேண்டும் விழியே...


கைவளையும் காகிதப் பூவும் தானே
எம் சிறை இருப்புக்கான சீர்கள் ..!
கனாக் காண்பதற்காகவா..?
இருளோடு உறவாடும் உன்னை
சினேகம் கொண்டேன்..!
மஞ்சள் குளித்து மௌனம் காத்து
மரணித்துக் கிடக்கிறோம் இன்னும்..!

பெத்துப் போட ஒரு இயந்திரம்..
சமைத்துத் தர ஒரு இயந்திரம்..
மண் குடிலின்  கிழிந்த பாய்களாய்
இன்னும் பெண்கள்..!
விடியலை தொடவேண்டும் விழியே
திறந்து கொள்.! உன் சிறைக் கதவை.!
 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...