jeudi 22 juin 2017

எல்லோர்க்கும் பெய்யும் மழை!!!

நிழல் தரு உயர் நிலை நீள நினைந்தேன்
ஏந்திழை ஏதறிவேன் உதிர் வெனும் இறப்பில்
காவலின் இமைகளும் இழந்தேன்
தனிமை கொடிதினும் கொடிதே
கொன்றே தின்றது என்னை            
இதய நரம்புகளையே (சு)வாசித்தேன்
துளிர்த்தன துளிர்கள் துணைக் கரம் வீசி
பூக்களின் வாசம் பூமிக்கும் தெளித்தேன்

கூவும் குயில்களே பாடும் கிளிகளே
கூடி வாருங்கள் குடியிருக்க   
இலையுதிர் காலம் திரும்பும் முன்னே
வசந்த காலம் வா வா எங்கிறது
நல்லார் இங்குளார் எனில்
எல்லோர்க்கும் பெய்யும் மழை

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...