vendredi 2 juin 2017

கவிக் கோவிற்கு கவிதாஞ்சலி ....

சோலைக் குயிலே கவினுறு காந்தக் கருவே
நீ கூடு விட்டு கூடல் நீங்கி பறந்த தேனோ
குஞ்சென்றும் தாயென்றும்
கிளை வாழ்ந்த குயில் களெல்லாம்
பாட்டுளந்து முகாரி பாடுதிங்கே
புல் நுணிப் பூவும் புலவா நின் கவி இன்றி புலம்புதிங்கே
கடுகு,க்குள்ளும் கவி புதைத்த வித்தகனே
வெள்ளி முடி தலைக்கணிந்து விருப்போடு போகிறாய்
உன் பிரிவாலே ஒளி கூட இருள் கொட்டி சாய்கிறதே
இருளாட்சி மாடம் உன்னை உள் வாங்கி தின்றாலும்
கவி நூல் களஞ்சியத்தில் உயிரே நீ உயிரானாய்
கவி மாலை சூடி சூட்டிட தந்த கவிக் கோவே
காலங்கள் நூறு கடந்தாலும்
காணா இன்பம் கனிந்து தந்தாய் கவி
உனக்கென்றும் பதினாறே ..

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...