vendredi 9 juin 2017

நின்னடி சரண் புகுந்தேன் தேவி....

நல்லார் இங்கெனில் பொல்லார் எவரோ தேவி
கண் விழி ஓடையில் கனலுற்றுக் கரைந்த துளி
உதட்டின் மேல் உப்புக் கரிக்கிதே
கல்லடி வீழ்ந்து செங்குருதி தோய்ந்தும் கலங்கா திருந்தேன்
வஞ்சகர் நாவின் சொல்லடி சுட்டே சுருங்கிப் போனேன்
சொல்லடி தாயே என்னை படைத்திட்ட தேவி
என்ன பிழை செய்தேன் ஏதும் அறிகிலேன்
அன்புக் கரம் கோர்த்தே துன்ப நிலை செய்தாரடி
புன்னகை பூக்கும் பூ நாகக் கண்களாலே
விசம் தீன்டி வீழ்ந்துவிட்டேன்
விருந்தும் மருந்துமாய் உன்னையே உட் கொண்டேன்
வஞ்கர் வாழ்வழித்து வெஞ்சினம் தணித்துவிடு
நின்னடி சரண் புகுந்தேன் தேவி
நிழல்லடி தாருவாய் நீயே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...