jeudi 8 juin 2017

அழகி நீயடி...

அழகிய பூமியில் ஏதெல்லாம் இன்பமோ
அதெல்லாம் காண்கின்றேன் தோழா
உன் தோள் சாய்ந்து !

உன் தோள் கொடு போதும்
வாழ் நாளெல்லாம் வாழ்கிறேன்
நீ பாதி நான் பாதியென அன்போடு

உச்சி மலை சாரல் வந்து
உன் சேதி சொன்னதடி
உண்மைதான் அழகி நீயடி

உருகாத மனமும் உன்னை கண்டு உருகும் போதில்
பயம் கொள்ளுதடி என் மனம் உன்னிடத்தில்
கிராமியக் குயிலே நீ பாடும் பூபாளம் கேட்க
எந் நாளும் வருவேன் நான் உன் வாசலுக்கே
ஆதவனும் உன் முகம் காணும் முன்னே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...