mercredi 31 mai 2017

பொன் வான ஓடம் நீ ....

ஏஞ்சலே வந்து போகிறாய்
ஏதேதோ சொல்லத் துடிக்கிறாய்
பிஞ் செனவே எண்ணாதே
அஞ்சுகமே அஞ்சாதே
எந் நாளும் பஞ்சணையில்
என்னை நீ கொல்லாதே...

கொல்லாமல் கொல்லும் கண்ணே
பொன் வான ஓடம் நீ
தூரக் கண்ணாடியில்
ஏதே தோ எழுதுகிறாய்
நம்பிக்கையே நல் வேதம்
நான் அறிவேன் உன் தாகம்
நான்கு சுவர் வேலிக்குள்
நற் தவம் கொள்வோம் வா.. வா..

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...