lundi 6 février 2017

கண்ட பின்னே சொன்னார் !!!

விண் தாரகைகளோடு நின்று குலாவும் நிலாவே
வெட்ட வெளி மீதிலும் நீ சட்டை போட்டதில்லை
குட்டை குளம் வெறுத்து நீந்தாமல் விலகவில்லை
அண்ட வெளி நின்று ஆதவன் ஒளி அள்ளி
கொடி இடை நீராடும் தாமரையின் இதழ் பரிசம் இட்டு
விடியல் வரும் போதில் விளக்கணைத்துப் போகின்றாய்

விரகம் எனச் சொன்னோரும் விழிப் புலனற்று
கால் நடையில் கார் இருள் கிடந்தோரும்
கண்ட பின்னே சொன்னார்
உண்பதற்கே இந்த ஊனும் உடலும் என்று
நிலாவே நீ வாழி   

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...