dimanche 12 février 2017

நீ எங்கே போகிறாய் !!!


நிலம் விட்டு புலம் பெயர்ந்த மென் மனமே

நீ எங்கே போகிறாய்....

காற்றும் வெப்பமும் கடும் குளிரும்

கூட்டாட்சி போரில் உன்னை அடித்தனவோ

தாளாது தணிந் துருகி மழையாய்

உன் மண்ணுக்கே வந்துவிட்டாய் 

நதியாய் நாணலாய் நடமுற்று

சங்கமக் கடலில் கலந்த ஜீவிதமே

சிலையாகினேன்

நின் ஜீவன் மண்ணுக்கே எழுதப்பட்ட

பட்டையக் கணக்கென கண்ட பின்னே



பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...