mardi 3 février 2015

தூயவள்...


தூயவள் எனக்கோர் தூதுவிட்டாள்
கலந்தேன் காதலில் காமுறவில்லை
என், வாசல் அழைத்து வாழ்வளித்தேன்
வசந்த ஊஞ்சலில் ஆடுகிறாள்...
 
வஞ்யிவள் சொந்தம் என்று
அந்தி மாலைப் பொழுதெல்லாம்
யார் யாரோ இவளிடத்தில்
இதழோடு இதழ் சேர்த்து
இளம் தேன் மது அருந்தி
இன்பராகம் பாடுகிறார்
யார் இவர்கள்?
 
நாலுகால் பந்தலிட்டு நான் வைத்த
வண்ண மல்லியே...
எத்தனையோ உறவுகள் வண்ண இறகால்
உன்னை அணைத்து முத்தமிட
வண்டாக நான் இல்லையே என வருந்துகிறேன்
வெள்ளை மலரே நீ என்றும் தூயவளே
நானும் உன் நாளாந்தக் காதலனே.!
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...