mercredi 18 février 2015

எட்டும்வரை எட்டினேன்...


எட்டா கனவை எட்டும்வரை எட்டினேன் - என்
எண்ணத்தில் எட்டவில்லை எட்டுத்தர எட்டு
விட்டுவிட மாட்டேன்....
தமிழ் பாட்டாலே பொட்டு வைத்து
தன் பொன் மனம் தந்தாள் என் அன்னை
குமிழ் கிரீடம் சூடிய அலைகள்
என்னை அழைத்துச் செல்ல
ஆழ் கடல் மூழ்கி அமிழ்ந் தெடுத்தேன்
தமிழாணிமுத்து
ஆசை கொள்ளேன் அதிகம்
அருவமாய்,
எண்பத்தி நான்கு கலைகளில்
எட்டை யேனும் எட்டி
அந்த எட்டுமலை உச்சியில்
மின்னும் தாரகையானேன்
மகுடம் சூடினாள் தமிழ் அன்னை...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...