samedi 14 février 2015

அகவை ஐந்து..


அரும்பாய் தளிர்த்து கருவறை இருந்து
எம் உறவில் உதித்த உயிரே...
உன்னில்!
மலரின் புன்னகை மனம் கண்டேன்
வல்லின மெல்லின  மொழி கண்டேன்
இடையின நடனத்தின் மிகை கண்டேன்
அசைச் சொல்லின் தொடராலே
ஆனது ஆனந்தம் அக மகிழ்ந்தேன்
ஐந்தாண்டின் அகவை
உன்னை அழைக்கின்றது
நட நட நீ உன் திருவடிப் பாதம் நலமுடனே
தமிழாட்சி உயர்வின் சொல்லாட்சியாளனே
எழுத்தாணி ஊன்றி எழுது நீ புது வாசகம்
வல்லமை தருவாள் கலைவாணி
நீ எழுதும் தமிழே சந்தணம்  
அது தரும் தரணிக்கு புதுத் திருவாசகம்
சொல்லாட்சி மிகை வெல்லும்
வல்லான்மையோனே வாழிய நீ
அறநெறி பொருள்  இன்பம் அனைத்தும் காத்து
நூறாண்டு காலம் நோய் நொடி இன்றி மான்புடனே...
 
தாத்தா அம்மம்மா...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...